search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக விரோத செயல்"

    • அங்கன்வாடி பள்ளி கட்டிடத்திலும் சமூக விரோதச் செயல்கள் நடக்கிறது.
    • பல்லடம் பஸ் நிலையத்தில் நிரந்தரமாக போலீசாரை நியமிக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் சுமார் 10 மாணவர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் சத்தம் போடவே மாணவர்கள் மோதலை கை விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்து சென்றனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:- பல்லடம் பஸ் நிலையத்தில் பயணிகளிடம் பிக்பாக்கெட், மற்றும் உடைமைகள் திருடுவது போன்ற குற்ற செயல்களும், மாணவர்கள் மோதல், மற்றும் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பால் கொடுக்கும் அறைக்குப் பின்புறம் பயன்படுத்தாமல் உள்ள அங்கன்வாடி பள்ளி கட்டிடத்திலும் சமூக விரோதச் செயல்கள் நடக்கிறது.

    இதனால் பஸ் நிலையத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் நடமாடுவதற்கு அச்சமாக உள்ளது. எனவே பல்லடம் பஸ் நிலையத்தில் நிரந்தரமாக போலீசாரை நியமிக்க வேண்டும். அல்லது அடிக்கடி ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    • பெரியார் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • அடிக்கடி வடமாநில வாலிபர்கள் மற்றும் வாலிபர்கள் இரவு நேரத்தில் வருவதும், போதையில் நடு ரோட்டில் சண்டையிடுவதும் நடைபெற்று வருவதாக புகார்.

    பல்லடம் :

    பல்லடம்- மாணிக்காபு–ரம் ரோட்டில் அமைந்துள்ள பெரியார் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சில திருநங்கைகள் அங்கு உள்ள ஒரு வீட்டில் குடி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்தப் பகுதியில் அடிக்கடி வடமாநில வாலிபர்கள், மற்றும் வாலிபர்கள் இரவு நேரத்தில் வருவதும், போதையில் நடு ரோட்டில் சண்டையிடுவதும் நடைபெற்று வருவதாக இப்பகுதி பொதுமக்கள் பலமுறை போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இந்தப் பிரச்சினையில் போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×